சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
2019-04-02@ 14:46:47

கும்பகோணம்: பங்குனி ஏகாதசியை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோயிலில் சுதர்சனவல்லி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி பெருமாள் கோயில் உள்ளது. சூரிய பகவான் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் கும்பகோணத்துக்கு பாஸ்கர ஷேத்திரம் என்ற காரண பெயரும், தல பெருமையும் பெற்ற சிறப்புடையது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து வருவது வழக்கம். அதன்படி நேற்று ஏகாதசி, சிரவணம் சேர்ந்து இருந்த நாளில் சுதர்சனவல்லி தாயார் சமேத சக்கரபாணி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி மாலை மாற்றல், சிறப்பு ஹோமம், நலுங்கு, ஊஞ்சல் உற்சவத்துடன் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (1ம் தேதி) இரவு 7 மணியளவில் பெருமாள் தாயார் வீதியுலா புறப்பாடு நடக்கிறது.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
நரசிம்மசுவாமி-நாமகிரி தாயாருக்கு திருக்கல்யாணம்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!