கீழப்பாவூர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்
2018-12-31@ 13:58:54

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் சீர்வரிசையுடன் கலந்து கொண்டானர். கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் மார்கழி மகோத்சவ விழாவில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு, பெண்கள் கோலாட்டம், கும்மி அடித்தல், தொடர்ந்து மாலைமாற்று வைபவம், ஊஞ்சல் சேவை, ஆண்டாள் கனவு கண்ட வாரணம் ஆயிரம் என்ற பிரபந்தம் மற்றும் அதற்கான பஜனை, கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் ஆகியவை நடந்தது.
பக்தர்கள் பழவகைகளை சீர்வரிசைகளாக கொண்டு வந்தனர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும். 5ம்தேதி ஹனுமத் ஜெயந்தி மற்றும் ஜன.15 தைப்பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரவி பட்டச்சாரியார், பக்தர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை