உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்
2018-09-12@ 14:45:15

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிராமத்தில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8வது நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை 5.10 மணிக்கு விநாயக பெருமானுக்கு சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதைத்தொடர்ந்து விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்திலேயே விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே கோயில் இதுதான். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை