தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரர், பரவை நாச்சியார் திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
2018-07-20@ 15:27:02

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற சுந்தரர். பரவை நாச்சியார் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 63 நாயன்மார்களில் ஒருவரும், இறைவனின் நண்பர் என்றும் அழைக்கப்படுபவர் சுந்தரர் சுவாமிகள். இவருக்கும் பரவை நாச்சியாருக்கும் ஆண்டு தோறும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் 2ம் பிரகாரத்தில் உள்ள தட்டஞ்சுத்தி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருவாரூர் நாலுகால் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு என்ற பெயரில் சுந்தரர் சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நிலையில், கோயிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள மண்டபத்திலிருந்து பரவை நாச்சியார் அழைத்து வரப்பட்டார். பின்னர் இருவருக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை