சென்னை: 95 வயது வரை வாழ்ந்த கலைஞர் மேலும் 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று விழா நாயகனாக இருந்திருப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞரின் ஆசியை தொடர்ந்து பெற்றுக் கொண்டே என்னுடைய ஆட்சியை நடத்தி வருகிறேன். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.