Friday, March 29, 2024
Home » 51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

51 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

by Karthik Yash

ஆத்தூர், மே 26: மல்லியக்கரை ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். மல்லியக்கரை ஊராட்சியில் நடப்பு நிதியாண்டில் ₹2.73 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வட்டார ஊராட்சியின் பொது நிதி சார்பில் ₹2.64 லட்சம் மதிப்பிலான பணிகளும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ₹4.20 லட்சம் மதிப்பிலான 3 பணிகளும், 15வது நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சி சார்பில் ₹5.50 லட்சம் மதிப்பிலான பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ₹3.78 லட்சம் மதிப்பிலான பணிகளும் மற்றும் புதியபள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு ₹2.70 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாமில்முகாமில் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ‘‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4புதிய குடும்ப அட்டைகளும், நத்தம் பட்டா மாறுதல் 5 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 2 பயனாளிகளுக்கும், உட்பிரிவு தனிப்பட்டா 14 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு வங்கிக்கடனுதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் பரப்பு விரிவாக்கம் 4 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் நுண் பாசன திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தெளிப்பு நீர் கருவிகளும், சுகாதார துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதியுதவிகளும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ₹44.25 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

You may also like

Leave a Comment

17 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi