ஜெயங்கொண்டம் மே 5: ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார தொழிலாளர்களின் மே தின விழா பேரணி நேற்று கொண்டாடப்பட்டது. விழா மற்றும் பேரணிக்கு லட்சுமி தலைமை வகித்தார். ஜெயா மற்றும் சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை மணிகண்டன் துவக்கி வைத்தார்.பேரணியானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக துவங்கி அண்ணா சிலை நான்கு ரோடு கடைவீதி வழியாக ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. சுரேஷ் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். சிவக்குமார் இறுதியில் நன்றி கூறினார்.