Tuesday, July 8, 2025
Home மாவட்டம் 5 தலைமுறைகளை கண்ட 110 வயது மூதாட்டி மரணம் குடியாத்தம் அருகே

5 தலைமுறைகளை கண்ட 110 வயது மூதாட்டி மரணம் குடியாத்தம் அருகே

by Karthik Yash

குடியாத்தம், ஜூலை 4: குடியாத்தம் அருகே 5 தலைமுறைகளை கண்ட 110 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். அவர் 5 தலைமுறைகளை கண்டு தனது சுமார் 110 வது வயதில் நேற்று இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவருக்கு செல்வம், மணி, சக்கரபாணி என 3 மகன்களும், பேபி, ஜெயந்தி, ருக்மணி என 3 மகள்களும் பேரன்- பேத்திகள், கொள்ளு பேரன்- கொள்ளுப் பேத்திகள், எள்ளு பேரன்- எள்ளு பேத்திகள் என 65 பேர் கொண்ட 5வது தலைமுறையை கண்டவர். முனியம்மாள் 110வது வயது வரை ஆரோக்கியமுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi