அந்தியூர், மே 8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை விண்ணப்பித்திருந்த அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 48 குடும்பங்களின் பயனாளர்களுக்கு குடும்ப அடையாள அட்டையினை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், வட்டாட்சியர் கவியரசு முன்னிலையில் வழங்கினார். இதில், வட்டல் வழங்கல அலுவலர் பூங்கோதை, திமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.