மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 40 பேர் சுட்டுக் கொலை என முதல்வர் பீரேன் சிங் தெரிவித்துள்ளார். ஷேக்மாய், சுக்னு, கும்பி, பேயங், செரவ் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே தீவிர சண்டை ஏற்பட்டுள்ளது. மோதல் நடந்த இடங்களில் சாலைகளில் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாக முதல்வர் பீரேன் சிங் தகவல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் எம்-16, ஏ.கே.-47 வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.