சென்னை: பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக 3 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. பெங்களூருவில், நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலை நிலவியது. இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்ற 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு வந்து தரையிறங்கின.
இந்த 3 விமானங்களில் வந்த பயணிகள் விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டு கடும் அவதியடைந்தனர்.