Wednesday, July 9, 2025
Home மாவட்டம் 3 மாணவர்களை பழனியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் வீட்டை விட்டு வெளியேறிய

3 மாணவர்களை பழனியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் வீட்டை விட்டு வெளியேறிய

by Karthik Yash

வேலூர், ஜூலை 1: பெற்றோர் படிக்க சொல்லி அறிவுறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவர்களை வேலூர் போலீசார் பழனியில் மீட்டு நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வேலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் நெருங்கிய நண்பர்களான 3 மாணவர்கள் கடந்த 27ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைககவில்லை. இதுகுறித்து மாயமான 3 பேரின் பெற்றோர்களும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தார். இதற்கிடையில், மறுநாள் 28ம் தேதி இரவு பழனி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுவர்களையும் அங்குள்ள போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 3 பேரும் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதாகவும், பெற்றோர் படிக்க சொல்லியும், வேலை செய்ய சொல்லியும் திட்டியதால், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பழனி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் பாகாயம் போலீசார் பழநிக்கு விரைந்து சென்று 3 மாணவர்களையும் மீட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் அழைத்து வந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi