Wednesday, April 17, 2024
Home » கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் சிறுவன் உள்பட 2 பேருக்கு வெட்டு: 6 வாலிபர்கள் கைது

கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் சிறுவன் உள்பட 2 பேருக்கு வெட்டு: 6 வாலிபர்கள் கைது

by Neethimaan
Published: Last Updated on

பெரம்பூர்: அயனாவரம் மாதா கோயில் தெருவில் உள்ள பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர். இதனை அயனாவரம், திருவள்ளுவர் நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48) என்பவர் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று முன்தினம் அவரை தாக்க தேடியுள்ளனர். அப்போது, சுரேஷ்குமாரின் 16 வயது மகன் மற்றும் உறவினரான தினேஷ் குமார் (21) ஆகிய இருவர் கிடைத்தால், அவர்களை வெட்டியுள்ளனர். இதில் தினேஷ்குமாருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

சிறுவனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மேடவாக்கம் 2வது தெருவைச் சேர்ந்த தனுஷ் என்ற தமிழரசன் (19), அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (22), வசந்த் (21), சதீஷ் (22), முத்துக்குமரன் (19), நவீன் (20) ஆகிய 6 பேர் இருவரை வெட்டியது தெரிந்து. அவர்களை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

seven + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi