வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன் நகரை சேர்ந்தவர் காளிராஜ்(26). பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22), ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சதீஷ் கண்ணன்(40). 3 பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பிராய்லர் கோழிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் புறப்பட்டனர். லாரியை டிரைவர் சதீஷ் கண்ணன் ஓட்டியுள்ளார். தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் லாரி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் காளிராஜ், அருண்குமார் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சதீஷ் கண்ணன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாலத்தின் சுவரில் லாரி மோதி 2 பேர் பலி
0
previous post