புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (8), ஆர்த்தி (6) ஆகிய இருவரும் நேற்று மதியம் பெற்றோருடன் சாப்பிட்டனர். பின்னர் திடீரென மாயமாகினர். வீட்டில் உள்ளவர்கள் நீண்டநேரமாக தேடியும் தகவல் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இரண்டு குழந்தைகளும் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது ‘லாக்’ ஆகியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.