Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 மகன்களுடன் இளம்பெண் மாயம்

தர்மபுரி, ஜூன் 1:தர்மபுரி அடுத்த பெரும்பாலை அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி மனோ பிரியா (28). இவர்களுக்கு 2 வயதில் இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபித்துக் கொண்டு பிரியா தனது மகன்களுடன், தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் தாய் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி சுகுமார் நேற்று முன்தினம் பெரும்பாலை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.