வந்தவாசி, மே 5: வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(55), கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவி ராஜகுமாரி மற்றும் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது வீட்டை அதே கிராமத்தில் உள்ள ராஜகுமாரியின் தாயார் முனியம்மாள் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் முனியம்மாள் வீட்டை பெருக்குவதற்கு சென்றார். அப்போது, முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தம்பதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது அறையில் பீரோ அருகில் இருந்த சாவியை கொண்டு திறந்து அரை சவரன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.