ஊத்தங்கரை, ஜூன் 6: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை அருகே ஆண்டியர் காவிரிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், விவசாயி. இவரது மனைவி ஐஸ்வர்யா (32). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு வீட்டில் படுத்திருந்த ஐஸ்வர்யா, நள்ளிரவு 12 மணியளவில் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கார்த்திகேயன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 குழந்தைகளின் தாய் மாயம்
0
previous post