Sunday, July 13, 2025
Home மாவட்டம்நாமக்கல் 190 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

190 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு

by Karthik Yash

சேந்தமங்கலம், ஜூலை 19: எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 190 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையை, ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார். எருமப்பட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு, இரு ஒன்றியத்தில், 190 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு தலைவர்கள் சாந்தி வெங்கடாஜலம், சங்கீதா சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலட்சுமி, சுகிதா, சுதா, முத்துலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi