சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும், வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளில் அதிகம் கூடுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 108. டிகிரி ஃபாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
மேலும், கரூர், கடலூர், ஈரோடு, மதுரை, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், பரங்கிப்பேட்டை, திருச்சி, திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெயில் பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் கரைகளிலும் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.