கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரி மகராஜகடை பெரிய சக்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(64). விவசாயியான இவர், கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் குமரேசன், மகராஜகடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்
0