சென்னை: 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். சென்னை மாதாவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு. இருவரும் கைகளில் துப்பட்டாவல் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டியூஷனில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.