*போலீசார் விசாரணை
கடலூர் : கடலூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் 12 ஆடுகள் இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(60). இவர் நேற்று முன்தினம் இரவு, தனக்குச் சொந்தமான ஆடுகளை சென்னை -நாகப்பட்டினம் சாலை வழியாக ஓட்டிச் சென்றார். அப்போது ஆடுகள் சாலையை கடக்க முயன்றது.
இதில் அந்த வழியாக வந்த கார் மோதியதில் 12 ஆடுகள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் நம்பர் பிளேட் ஒன்றை கைப்பற்றினர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காரில் சிக்கி 12 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.