கரூர், ஏப். 29: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மூன்று நாள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு \”அடுத்த தலைமுறைக்கான எதிர்காலத் தயார்நிலை திறன்களை உருவாக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு\” என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பு கே.ஆர். நிறுவனக் குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இணைச் செயலாளர் சரண் குமார், கல்லூரியின் முதல்வர் முருகன், நிர்வாக இயக்குநர் குப்புசாமி, டீன்-அட்மிஷன் சுந்தரராஜு, மாணவர்கள் நலத்துறை தலைவர் ரமேஷ் மற்றும் முதலாமாண்டு துறைத்தலைவர் சித்திரகலா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது.