நாமக்கல், பிப்.19: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1800 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். விழுப்புரம், கோவை, ஈரோடு, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹8490க்கும், மட்டரகம் ₹4419க்கும் ஏலம் போனது. மொத்தமாக ₹45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
+
Advertisement


