Saturday, April 20, 2024
Home » வெளிநாடு செல்பவர்கள் தூதரகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

வெளிநாடு செல்பவர்கள் தூதரகங்களில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

by Neethimaan

சிவகங்கை, மே 27: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அரசு விதிகளை கடைபிடித்து செயல்பட போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்பவர்கள் முறையாக அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தன்வசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பிரச்சனைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். உள்ளூர் அலுவலகங்களில் முறையான அனுமதியின்றி வேறு நிறுவனத்திலோ, முகவர்களிடமோ வேலைக்கு செல்லக்கூடாது. பணிபுரியும் இடம், நிறுவனம் முகவரி, தொலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களையும் வீட்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வெளி நாடுகளுக்கு பணிக்கு சென்ற உடனேயே இந்திய தூதரகத்தை அல்லது துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi