ஈரோடு,ஜூன்5: ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில், கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(54). இவர், அரசு போக்குவரத்துக் கழகம், பெருந்துறை கிளையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர்,தனது மனைவியுடன், துணி எடுப்பதற்காக கடந்த 2ம் தேதி ஈரோடு சென்றுவிட்டார். அன்ற மாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து மாதேஸ்வரன், காஞ்சிக்கோயில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், நேற்று முன் தினம் போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.