Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விஷஊசி போட்டுக் கொண்டு டாக்டர் தற்கொலை வேலூரில் பரிதாபம்

வேலூர், ஜன.12: வேலூரில் முதுகலை டாக்டர் விஷஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.மணிகண்டன்(32). வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.டி முதுகலை மருத்துவம் முடித்துவிட்டு அரசுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இதனால் வேதனையில் இருந்து வந்த மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை தனது அறையை பூட்டிக் கொண்டுள்ளார். நீண்டநேரமாக கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து திறந்த அவரது உறவினர்கள் மணிகண்டன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை வேலூர் ஜிபிஎச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதுதொடர்பாக அவரது தந்தை ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.