Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை

சென்னிமலை, செப். 17: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் கீழ் பவானி வாய்க்காலில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வாய்க்காலில் குதித்த மூதாட்டியை தண்ணீரில் இருந்து மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட மூதாட்டிக்கு சுமார் 70 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ஊதா மற்றும் மஞ்சள் நிற சேலை, கத்தரிப்பூ நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.