விருதுநகர், மே 31: வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி துறையூரில் மணல் கடத்தை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான வருவாய்த்துறையினர் கலந்துகொண்டனர்.