Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில் மோதி ஒருவர் பலி

ஈரோடு, பிப். 13: ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட வீரபாண்டி-மகுடஞ்சாவடி ரயில்வே தண்டவாள பகுதியில் ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் அங்கு சென்று, இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால், இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.