Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

மயிலம், ஜன. 14: மயிலம் அடுத்துள்ள தென்பசார் ரயில்வே கேட்டுக்கும் சிங்கனூர் ரயில்வே கேட்டுக்கும் இடையில் உள்ள பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து சென்னை எழும்பூரை நோக்கி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தென்பசார் ரயில்வே கேட்டுக்கும் சிங்கனூர் ரயில்வே கேட்டுக்கும் இடையே வந்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் திடீரென குறுக்கே சென்றதால் ரயில் அந்த நபர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே மற்றும் மயிலம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.