திட்டக்குடி, மே 24: பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி தமிழ்மணி (28). இவர் ராமநத்தத்தை அடுத்துள்ள மேலகல்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ராமநத்தத்திலிருந்து அவரது தாய் வீடான வாகையூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த ஒரு மர்ம நபர் அவரிடம் அரியலூருக்கு எப்படி செல்வது என கேட்டுள்ளார். அப்போது திடீரென அந்த மர்ம நபர் தமிழ்மணி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதனை அடுத்து தமிழ்மணி செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தமிழ்மணி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் மர்ம நபர் செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு
previous post