மதுரை, ஜூன் 7: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் பிச்சை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.