Tuesday, April 23, 2024
Home » மண்ணச்சநல்லூரில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை

மண்ணச்சநல்லூரில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த மழை

by MuthuKumar

சமயபுரம், மே 31: மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திர வெயில் நிறைவடைந்தது இருப்பினும் நேற்று வெயிலின் தாக்கம் 103 டிகிரியாக வெயில் சுட்டெரித்தது. மேலும் இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென பலத்த காற்று , இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது மண்ணச்சநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 அரை மணிநேரம் வரை நீடித்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கனமழையால் மண்ணச்சநல்லூர், சமயபுரம், திருப்பைஞ்ஞீலீ மற்றும் சுற்று வட்டார பகுதியில் சுமார் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

You may also like

Leave a Comment

9 + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi