சாத்தூர், ஜூன் 6: சாத்தூர் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சாத்தூர் அருகே முத்தார்பட்டியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி ராமலட்சுமி (48). இவர் தோட்டத்தில் இருந்து ஆடுகளுக்கு புற்களை தலைச்சுமையாக எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே தெருவை மறித்து, வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த கணேசன், அழகுமலை, பெரியபாண்டி, சந்தனமாரி மற்றும் அழகம்மாள் ஆகியோர், ராமலட்சுமியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இத தொடர்பாக ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.