Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டணை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த

வேலூர், டிச.13: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. காட்பாடியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சுந்தரேசன் (29). தொழிலாளி. இவரும் 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் கடந்த 2021ம் ஆண்டு அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் காட்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பின்னர் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சுந்தரேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார். நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் சுந்தரேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ₹3 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.