வேதாரண்யம்,ஜூன்6: நாகப்பட்டினம் மாவட்டம் அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை சுடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு டெமோ ரயில்சேவை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கபட்டது. இந்த இரயில் நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியம்பள்ளிக்கு 8 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் எட்டு மணிக்கு திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டு, ஹாரன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது பின்பு சரி செய்யபட்டு ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சென்றது.