Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி உத்தரவு

பந்தலூர், அக்.2: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்காக 297 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதற்கட்டமாக நேற்று 144 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் துணைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி உத்தரவை வழங்கினார்.

ஊராட்சி செயலாளர் சஜீத் முன்னிலை வகித்து கூறுகையில், கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும். மேலும் நூறு நாள் வேலை திட்டப்பணியாளர்களை 90 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து பணி உத்தரவை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.