அய்யலூர், ஜூன் 5: வடமதுரை எஸ்ஐ கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாண்ி, பிரபாகரன், சக்திவேல், பாலமுருகன், சின்னாத்தேவர், சித்திரைவேல் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.6,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.