அரியலூர், மே 31: அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை பணிகள் நேற்று நடைபெற்றது.ஜூன் 7ம் தேதி பள்ளி திறப்பை முன்னிட்டு , அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட தகல்வி அலுவலர் ஜெயா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி , அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் பணியாளர்கள் இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைகள், பள்ளி வளாகம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து ,துணை தலைவர் பழனியம்மாள் ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறுவளூர் அரசு பள்ளியில் தூய்மை பணி
previous post