சிவகாசி, ஜூன் 6: சிவகாசியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபாரதம் விதித்துள்ளனர். சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு தீவிர பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் தினமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருத்தங்கல் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த இரு மாடுகளை பறிமுதல் செய்தனர். அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.