சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை பாம்கோ தலைமை அலுவலகத்தில் பாம்கோ தொமுச சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாம்கோ தொமுச பொதுச்செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில் தொமுச நிர்வாகிகள் சரவணன், மலைச்சாமி, சேகரன், விஜயா உறுப்பினர்கள் அருள், ராமு, சக்தி, டெய்சி, கண்ணையா மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.