ஆறுமுகநேரி, பிப். 7: ஆத்தூர் வடக்குரத வீதியை சேர்ந்தவர் ராஜகோபால்(72), விஏஓவாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவர், ஆத்தூரில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று காலையில் ராஜகோபால், ஆத்தூர் பஜாருக்கு வந்துவிட்டு சென்றவர், பின்னர் வீட்டின் மாடியில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து ஆத்தூர் போலீசார், ராஜகோபாலின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


