சாமராஜநகர்: சாம்ராஜ்நகரில், 10க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாம்ராஜ்நகர் தாலுகா தி.நகரில் உள்ள கல்லுாரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஹிஜாப்பும் எங்களுக்கு முக்கியம். ஹிஜாப் அணிய அனுமதிக்காவிட்டால் தேர்வு எழுதமாட்டேன்’ என வலியுறுத்தினார்….
ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதமாட்டோம்: மாணவிகள் போராட்டம்
23
previous post