வேலூர், ஜூலை 17: வேலூர் எஸ்பியாக பணியாற்றி வந்த மதிவாணன், சென்னை நார்கோடிக் இன்டலிஜென்ஸ் பீரோவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கிருந்த எஸ்பி மயில்வாகனன் வேலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்பி மயில்வாகனன் நேற்று காலை வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement
