கிருஷ்ணகிரி, மார்ச் 12: ராயக்கோட்டை அருகேயுள்ள தொட்டமெட்டரை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன்(60), டிரைவர். இவர் கடந்த 9ம் தேதி இரவு, தர்மபுரி -ஓசூர் சாலையில் ராயக்கோட்டை கருக்கனஅள்ளி பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினிவேன், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சின்னப்பன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த ராயக்கோட்டை போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் மோதி டிரைவர் பலி
0
previous post