வேதாரண்யம், ஜூலை 20: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில், வடமறைக்காடர் கோயில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோயில், கோடியக்காடு குழவர் கோயில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோயில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோயில், வெள்ளப்பள்ளம் சிவன் கோயில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோயில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோயில், அகரம் அழகியநாதர் கோயில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோயில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோமநாதர் கோயில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோயில், கத்தரிப்புலம் கோயில்குத்தகை காசிநாதர் கோயில் ஆகிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.