தோகைமலை, நவ. 17: கரூர் மாவட்டம் கடவூர் அருகே தே.இடையப்பட்டி மேற்கு கிராமம் தெற்கு அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நல்லுச்சாமி. கால்நடைகள் வளர்க்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தியிருந்தார். இந்நிலையில் நல்லுச்சாமி நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக கூட்டமாக வந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதனால் ஆடுகளின் வயிற்று பகுதியில் பலமாக காயம் ஏற்பட்டு ஆட்டின் குடல்கள் வெளியே வந்ததது, ஆடுகள் சத்தம் போட்டு உள்ளது.
அப்போது நல்லுச்சாமி ஓடி வந்து வெறிநாய்களால் படுகாயமடைந்து 2 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளில் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம். வெறிநாய்களை கட்டுப்படுத்த கடவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.