கரூர், மார்ச் 10: மோசமான நிலையில் உள்ள பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் எல்லைமேடு பகுதியின் வழியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்ககால் செல்கிறது. மழைக்காலத்தில் இநத பாசன வாய்க்காலில் தண்ணீர் பல்வேறு விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் இந்த பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களா இந்த வாய்க்கால் சீரமைக்காத காரணத்தினால் செடி கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இநத வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
எனவே, மோசமான நிலையில் உள்ள இந்த பாசன வாய்க்கலை சீரமைத்து எளிதாக மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் இநத வாய்க்காலை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.